கும்பகோணம் பகுதி திருக்கோயில்களில் ஆனித்திருமஞ்சன விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கோயில் நகரமான கும்பகோணத்தில் அமைந்துள்ள சிவாலயங்களான ஆதிகும்பேஸ்வரர், சோமேஸ்வரர், நாகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் ஆகிய ஆலயங்களில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு ஒரு வருடத்தில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களில் ஒன்றாகிய ஆனித் திருமஞ்சன விழா (சாயரக்ஷை அபிஷேகம்) நேற்று (8-7-2019) மாலை நடைபெற்றது.
இவ்விழாவினையொட்டி அருள்மிகு ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு பலவித அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரமும் அதனைத் தொடர்ந்து தூப, தீபாரதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
- குடந்தை சரவணன்