திருப்பதியில் ஜூலை 1-ம் தேதி முதல் வாடகை அறை வழங்கும் நடைமுறைகளில் சிறிய மாற்றத்தை தேவஸ்தானம் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான வாடகை வளாகங்களில் அறை எடுத்துத் தங்கி வருகின்றனர். இந்த வளாகங்களில், தர்ம தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் கவுன்ட்டர்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த வாடகை அறைகளை 90 நாள்களுக்கு முன் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தேவஸ்தானம் அளித்து வந்தது. ஆனால், நேரடியாக வரும் பக்தர்களுக்கு வாடகை அறை வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதால், தேவஸ்தானம் இந்த நடைமுறையில் சிறிய மாற்றத்தைச் செய்துள்ளது.
திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள விஷ்ணு நிவாசம் வளாகத்தில் உள்ள வாடகை அறைகள், நேரடி முன்பதிவில் மட்டுமே வழங்கப்பட உள்ளன. பக்தர்கள் அறை ஒதுக்கீட்டைப் பெற்ற பின், 24 மணிநேரத்திற்குள் அறையைக் காலி செய்ய வேண்டும். மேலும் பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் மற்றும் மாதவம் உள்ளிட்ட வளாகங்களில் உள்ள வாடகை அறைகள் இணையதள முன்பதிவு மூலம் மட்டுமே வழங்கப்பட உள்ளன.
இணையதளம் வாயிலாக வாடகை அறை முன்பதிவு செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு வரத் தவறினாலும், முன்பதிவில் குறிப்பிட்டுள்ள 24 மணி நேரத்திற்குள் அறையைக் காலி செய்ய வேண்டும். அவர்களுக்கு நேர நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. இந்த மாற்றம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: பணியாளர் பலி

அஜித்தின் தாயார் உடலுக்கு நாசர் அஞ்சலி!

பாகிஸ்தான் பந்துவீச்சு: ஆஸி. அணியில் அறிமுகமான யு19 வீரர் ஆலிவர் பீக்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



