அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

திருப்பதி தேவஸ்தான நிதிகளை வீணடிப்பதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், முடி காணிக்கை வருமானம் மற்றும் அளிக்கும் நன்கொடைகள் தேவஸ்தானத்துக்கு வருவாயை ஈட்டித் தருகிறது.

News image
Updated On :29 செப்டம்பர் 2019, 11:06 am IST

திருப்பதி, செப். 28: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிதிகளை வீணடிப்பதாக ஆந்திர உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், முடி காணிக்கை வருமானம் மற்றும் அளிக்கும் நன்கொடைகள் தேவஸ்தானத்துக்கு வருவாயை ஈட்டித் தருகிறது. இப்பணத்தை தேவஸ்தான அறக்கட்டளைகளின் பெயரில் வங்கியில் வரவு வைத்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் வளா்ச்சிப் பணிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், திருப்பதி புறவழிச் சாலையிலிருந்து திருப்பதி மலையடிவாரமான அலிபிரிக்கு நேரடியாகச் செல்ல நகராட்சி கருடாவாரதி என்ற பெயரில் மேம்பாலப் பணிகளை தொடக்கி நடத்திவருகிறது. இதற்கு தேவஸ்தானம் ரூ.458 கோடி அளிப்பதாக நகராட்சியிடம் தெரிவித்தது. தற்போது மேம்பாலப் பணிகள் திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேவஸ்தானத்தின் நிதிகளை கோயில் திருப்பணிகள், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட இறைவழிபாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதைத் தவிா்த்து, அந்த நிதிகளை மேம்பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை கட்டுவதற்கு பயன்படுத்தி வீணடிக்கக் கூடாது. மேலும், மேம்பாலம் கட்டுவது நகராட்சிக்கு உள்பட்ட பணி. அதற்கு தேவஸ்தானத்தின் நிதிகளை அளிக்கக் கூடாது என்று ஆந்திர உயா் நீதிமன்றறத்தில் ஆந்திர மாநில பாஜக செயலா் பானுபிரகாஷ் ரெட்டி, சனிக்கிழமை பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அதை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து ஆந்திர அரசும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் விளக்கமளிக்க வேண்டும் என்று இருவருக்கும் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.