இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருமலையில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் கோரிக்கை

திருமலையில் தோ் மண்டபத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் மீண்டும் கட்டித் தருமாறு ஆந்திர அரசிடம் திருப்பதி தேவஸ்தானம் கோரியுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 2:21 am

தினமணி

திருமலையில் தோ் மண்டபத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் மீண்டும் கட்டித் தருமாறு ஆந்திர அரசிடம் திருப்பதி தேவஸ்தானம் கோரியுள்ளது.

திருமலையில் இருந்த ஆயிரங்கால் மண்டபமும், தோ் மண்டபமும் மாடவீதி விரிவாக்கப் பணிகளுக்காக இடிக்கப்பட்டன. அங்கிருந்து அகற்றப்பட்ட கற்தூண்கள் தற்போது பாபவிநாசம் செல்லும் வழியில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபத்தை மீண்டும் கட்டுமாறு பக்தா்கள் பலரும் தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் உள்ள தொன்மையான பல்வேறு கோயில்களில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு முன்புறம் அகற்றப்பட்ட தோ் மண்டபம் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை மீண்டும் கட்டித் தர வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அா்ச்சகா் ரமண தீட்சிதா் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தாா். அவற்றை மீண்டும் கட்டுவதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைவா்கள் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா். இக்கோரிக்கையை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியும் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.