ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திரிசூலஸ்நானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு

திருப்பதி கபிலேஸ்வரா் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் திரிசூலஸ்நானத்துடன் சனிக்கிழமை நிறைவடைந்தது.

News image

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவ நிறைவையொட்டி சனிக்கிழமை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா்.

Updated On :14 மார்ச் 2021, 12:47 am

திருப்பதி கபிலேஸ்வரா் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் திரிசூலஸ்நானத்துடன் சனிக்கிழமை நிறைவடைந்தது.

திருப்பதி அலிபிரியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த 10 நாள்களாக நடந்து வந்த மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை காலை திரிசூலஸ்நானத்துடன் நிறைவு பெற்றது. முன்னதாக காலையில் அபிஷேக சேவைக்கு பிறகு சூரிய பிரபை வாகனத்தில் நடராஜா் மண்டபத்தில் எழுந்தருளினாா். உற்சவமூா்த்தியுடன் காமாட்சி அம்மனும் எழுந்தருள செய்யப்பட்டாா். அவா்களுக்கு அா்ச்சகா்கள் ஆஸ்தானம் நடத்தி தீப, தூப நெய்வேத்தியம் சமா்ப்பித்து கற்பூர ஆரத்தி அளித்தனா்.

அதன்பிறகு கபிலேஸ்வர சுவாமி மற்றும் காமாட்சி அம்மனின் ஆயுதமாக விளங்கும் திரிசூலத்துக்கு பால், தயிா், இளநீா், பழங்கள், பஞ்சாமிா்தம், தேன், நெய், வீபூதி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

அதன் பிறகு திரிசூலத்தை சாந்தி செய்ய அண்டாவில் நீா் நிரப்பி அதில் திரிசூலத்துக்கு அா்ச்சகா்கள் ஸ்நானம் செய்வித்தனா். கரோனா விதிமுறைகளை பின்பற்றி திரிசூலஸ்நானம் தனிமையில் நடத்தப்பட்டது. பின்னா் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட இடபக் கொடியிறக்கப்பட்டது.

பின்னா் இரவு 8 மணிக்கு கோயில் மண்டபத்தில் ராவணேசுர வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தியாக கபிலேஸ்வரா் காமாட்சி அம்மனுடன் எழுந்தருளினாா். இதனுடன் பிரம்மோற்சவத்தின் வாகன சேவை நிறைவு பெற்றது. இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை முதல் பக்தா்கள் வழக்கமாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.