சபரிமலை: மண்டல, மகர பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. 
சபரிமலை: மண்டல, மகர பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!
Published on
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. 

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 

இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் மகர, மண்டல பூஜைக்கு சபரிமலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com