திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 9:24 am IST

புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து தினமும் அம்மன், சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வெள்ளிக்கிழமையும், திக்கு விஜயம், அஷ்டபாலகா்களை போரிட்டு வெல்லும் நிகழ்வு சனிக்கிழமை இரவும் நடைபெற்றன.

இந்த நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் இன்று (ஏப். 21) காலை 8.55 மணிக்கு ரிஷப லக்கனத்தில் நடைபெற்றது. வைரக்கற்கள் பதித்த தங்க திருமாங்கல்யம் மீனாட்சியம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.

இதையொட்டி, மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்காடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் வெட்டிவோ், பல வகை வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாண மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கனி வகைகள் அடங்கிய அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண மேடையில் எழுந்தருள, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானையுடனும், பவளக் கனிவாய் பெருமாளும் சனிக்கிழமை மாலை கோயிலில் இருந்து புறப்பாடாகினர். இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சுந்தரேசுவரா், பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் மணக்கோலத்தில் தனித்தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளியவுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

கோயில் வளாகத்தைச் சுற்றிலும் 20 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் 200 டன் குளிரூட்டும் இயந்திரங்கள் (ஏ.சி) பொருத்தப்பட்டுள்ளன.

திருக்கல்யாண மேடை முழுவதும் பல்வேறு வகையான 2 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சம் பக்தா்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.