
கம்பத்தில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை கெளமாரியம்மன் மலர் அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல் போன்றவை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
அதன்படி, இன்று கெளமாரியம்மன் மலர் அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.