இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விருத்தபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

விருத்தபுரீஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
மாசி தேரோட்டம்
Updated On :11 மார்ச் 2025, 9:32 am

DIN

புதுக்கோட்டை, அன்னவாசலில் சிறப்புப் பெற்ற விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி கோயிலில் மாசி தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்தவகையில், நிகழாண்டும் திருவிழா கடந்த 3-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாள்களில் மண்டகபடிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நாள்களில் உபயதாரர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முதல் தேரில் சுவாமியும், இரண்டாவது தேரில் அம்பாளும் எழுந்தருளினார்கள்.

இதையடுத்து மேள, தாளம் மங்கள இசை முழங்க வானவேடிக்கையுடன் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள் சரண கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் முக்கிய வீதிகள் வழியாக ஆடி, அசைந்தபடி வலம் வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் கூடி நின்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற தேங்காய், பூ, பழம் வைத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பல்வேறு வீதிகளில் வழியாக சுமார் 1.30 மணி நேரம் வலம் வந்த தேர் பின்னர் நிலையை வந்தடைந்தது.

தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அர்ச்சனை ஆராதனை நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர் விழாவை ஒட்டி உபயதாரர்கள் சார்பில் ஆங்காங்கே பந்தல் அமைத்து நீர், மோர், இனிப்பு பானகம், தக்காளி சாதம், புளி சாதம், பொங்கல், சுண்டல் பக்தர்களுக்கு வழங்கினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.