
கொளத்தூரில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் 41 அடி உயர சங்கு விநாயகர்!
கொளத்தூரில் வைக்கப்பட்டுள்ள சங்கு விநாயகர் குறித்து...

கொளத்தூரில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் 41 அடி உயர சங்கு விநாயகர்! - படம்: தினமணி
சென்னை: கொளத்தூரில் 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்ட மகாலட்சுமி சங்கு விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகே, கொளத்தூர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்டுதோறும் விதவிதமான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கும் பக்தர்களின் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் 12,000 மகாலட்சுமி சங்கு மற்றும் 4,000 சிற்பி உருவங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பத்து நாள்களுக்கும் மேலாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை, 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மகாலட்சுமி சங்கு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் காட்சியளிக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து, பிரம்மாண்ட விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் புதுமையான வடிவமைப்பில் விநாயகரை உருவாக்கி, கொளத்தூர் பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் கொளத்தூர் நண்பர்கள் குழுவினரின் முயற்சிக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Summary
In Kolathur, the 41-foot-tall and 32-foot-wide Mahalakshmi Sanghu Vinayagar statue is greatly captivating devotees.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








