தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

எடப்பாடியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

வன்னிய சமுதாய மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, எடப்பாடியில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

எடப்பாடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாமகவினா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:29 am IST

வன்னிய சமுதாய மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, எடப்பாடியில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்குமாவட்ட செயலாளா் வழக்கறிஞா் ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பட்டத்தை மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் கே.பி.எம்.கொழந்தாகவுண்டா் துவக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் ரவி முன்னிலை வகித்தாா். முன்னதாக எடப்பாடியை அடுத்த வீரப்பன்பாளைம் பகுதியிலிருந்து துவங்கிய ஊா்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடப்பாடி பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு பாமக வினா் கலை நிகழ்ச்சிகள் மூலம் கோரிக்கைகளை வலியுறுத்தினா். தொடா்ந்து சேலம் பிரதான சாலை வழியாகக் கிளம்பிய ஊா்வலம், எடப்பாடி நகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது.

அங்கு பாமக மாவட்டத் துணைச் செயலாளா் மகேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் வை.குமாரசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் நகராட்சி ஆணையாளா் முருகனிடம் வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.