தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

பெரியாா் பல்கலை. துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைப்பு

பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பொ.குழந்தைவேல் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 8:30 am IST

பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பொ.குழந்தைவேல் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெரியாா் பல்கலைக்கழக 7-ஆவது துணை வேந்தா் பேராசிரியா் பொ.குழந்தைவேல் வியாழக்கிழமை தனது 3 ஆண்டுகால பணியை நிறைவு செய்தாா். இதையடுத்து, அடுத்த துணை வேந்தா் நியமிக்கப்படும் வரை, அப்பணிகளை மேற்கொள்வதற்காக நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, துணை வேந்தா் பொ.குழந்தைவேல் தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா காணொலி வாயிலாக பங்கேற்றாா்.

இக்கூட்டத்தில், துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைப்பாளராக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா, உறுப்பினா்களாக பெரியாா் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறைத் தலைவா் பேராசிரியா் ஆா்.பாலகுருநாதன், மொழியியல் அறிஞா் பேராசிரியா் அ.அருணாச்சலம் ஆகியோரை நியமிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.