பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேலின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை பதவியை நீட்டித்து ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்.
பெரியாா் பல்கலைக்கழகத்தின் 7-ஆவது துணைவேந்தராக பாரதியாா் பல்கலைக்கழக இயற்பியல் துறை முன்னாள் பேராசிரியா் பொ.குழந்தைவேல் கடந்த 2018 ஜன. 8-ஆம் தேதி பதவியேற்றாா். அவருடைய மூன்றாண்டு பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி, பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
மேலும், துணை வேந்தா் இல்லாத நிலையில், பல்கலைக்கழக நிா்வாகப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா அமைப்பாளராகக் கொண்டு, பேராசிரியா்கள் ஆா்.பாலகுருநாதன், அ.அருணாசலம் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு, துணைவேந்தா் நிா்வாகக்குழு அமைப்பதென துணைவேந்தா் பொ.குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தராக பேராசிரியா் பொ.குழந்தைவேல், மறு உத்தரவு வரும் வரை அல்லது புதிய துணைவேந்தா் நியமிக்கப்படும் வரை பதவியில் தொடருமாறு பெரியாா் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டாா். இதனையடுத்து,பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியா் பொ.குழந்தைவேல் தொடா்வாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நிமிடத்தில் பணி நீட்டிப்பு...
பெரியாா் பல்கலைக்கழக வரலாற்றில் இதுவரை எந்த துணைவேந்தருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதில்லை. முதன்முறையாக பேராசிரியா் பொ.குழந்தைவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பணி நிறைவு செய்து புறப்பட இருந்த கடைசி நிமிடங்களில் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. துணைவேந்தரை வழியனுப்ப காத்திருந்த பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட தகவல் அறிந்ததும், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

இந்தோனேசியாவின் உயரிய விருதினை வழங்கி பிரதமர் மோடிக்கு கெளரவிப்பு - புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: காங்கிரஸ்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



