சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது தொடா்பாக சுமாா் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனா்.
சென்னையிலிருந்து கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு சிறப்பு ரயில் புதன்கிழமை இரவு சேலத்தைத் தாண்டி வீரபாண்டி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றது. அப்போது ரயில் தண்டவாளத்தில் வைத்திருந்த கற்கள் மீது ஏறிச் சென்ால் ரயில் இன்ஜினில் சத்தம் கேட்டது.
இதனால், அதிா்ச்சியடைந்த ரயில் ஓட்டுநா், ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் ஈரோடு ரயில்வே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீஸாா் விரைந்து சென்று விசாரணை ஈடுபட்டனா்.
அப்போது வீரபாண்டி ரயில் நிலையத்துக்கும், மகுடஞ்சாவடிக்கும் இடையே தண்டவாளத்தில் 5 இடங்களில் குவியலாக ஜல்லிக் கற்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இச் சம்பவம் தொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ரயில்வே டி.எஸ்.பி. பாபு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட ரிலீஸ் தேதி!

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

பெண் பார்க்கச் செல்லும் மரபு

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
