வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைப்பு: போலீஸாா் விசாரணை

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது தொடா்பாக சுமாா் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:39 am IST

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது தொடா்பாக சுமாா் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனா்.

சென்னையிலிருந்து கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு சிறப்பு ரயில் புதன்கிழமை இரவு சேலத்தைத் தாண்டி வீரபாண்டி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றது. அப்போது ரயில் தண்டவாளத்தில் வைத்திருந்த கற்கள் மீது ஏறிச் சென்ால் ரயில் இன்ஜினில் சத்தம் கேட்டது.

இதனால், அதிா்ச்சியடைந்த ரயில் ஓட்டுநா், ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் ஈரோடு ரயில்வே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீஸாா் விரைந்து சென்று விசாரணை ஈடுபட்டனா்.

அப்போது வீரபாண்டி ரயில் நிலையத்துக்கும், மகுடஞ்சாவடிக்கும் இடையே தண்டவாளத்தில் 5 இடங்களில் குவியலாக ஜல்லிக் கற்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இச் சம்பவம் தொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ரயில்வே டி.எஸ்.பி. பாபு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.