ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

மகிழ்ச்சி வரும்!

பொங்கல் வந்தால் என்ன வரும்?புத்தம்புதிய நெல்லு வரும்!நெல்லை அரைத்தால் என்ன வரும்?

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:00 am IST


பொங்கல் வந்தால் என்ன வரும்?
புத்தம்புதிய நெல்லு வரும்!
நெல்லை அரைத்தால் என்ன வரும்?
நன்றாகப் பச் சரிசி வரும்!

அரிசி பின்னால் என்ன வரும்?
அச்சுக் குலையா வெல்லம் வரும்!
வெல்லம் வந்தபின் என்ன வரும்?
வெள்ளை உள்ளத் தேங்காய் வரும்!

தேங்காய் கூட என்ன வரும்?
தித்திக்கின்ற கரும்பு வரும்!
கரும்பின் அருகில் என்ன வரும்?
கொத்தாய் இருக்கும் மஞ்சள் வரும்!

மஞ்சளை அடுத்து என்ன வரும்?
மலர்களைத் தொடுத்த கதம்பம் வரும்!
ஏலம், சுக்கு, இஞ்சி வரும்!
இவற்றை நெய், பால், மிஞ்சி வரும்!

வாழைப் பழமும் இலையும் வரும்!
வாசலில் கோலக் கலையும் வரும்!
பொங்கலோ பொங்கல் ஓசை வரும்!
பொங்கலைத் திங்க ஆசை வரும்!

மஞ்சு விரட்டுக் காளை வரும்!
மாடுகள் ஓடும் வேளை வரும்!
தை...தை... என்று மாதம் வரும்!
தமிழ்நாடெங்கும் மகிழ்ச்சி தரும்!

பொதுமைப் பித்தன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.