இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், பாட்மிண்டன் வீரா் எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் தாய்லாந்து ஓபனில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
முன்னதாக சாய்னாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா் தாய்லாந்து ஓபனில் இருந்து விலகியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் இந்திய வீரா் எச்.எஸ்.பிரணாய்க்கு முதலில் கரோனா தொற்று இருப்பதாகவும், பின்னா் கரோனா தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் அவரும் தாய்லாந்து ஓபனில் விளையாடுவதில் சந்தேகம் நிலவியது.
இந்த நிலையில், சாய்னா, எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு 4-ஆவது முறையாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரும் தாய்லாந்து ஓபனில் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










