இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மோடியுடன் டென்மார்க் பிரதமர் சந்திப்பு

முதல்முறையாக இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

News image
மோடியுடன் டென்மார்க் பிரதமர் சந்திப்பு
Updated On :9 அக்டோபர் 2021, 12:05 pm

DIN

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் முதல்முறையாக இன்று இந்தியா வந்துள்ளார். மூன்று நாள் அரசு முறை பயணமாக வந்த அவரை, விமான நிலையம் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். மேலும் குடியரசுத் தலைவர் மாளிகையில் டென்மார்க் பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

.பின்னர், ராஜ்காட்டில் உள்ள அண்ணல் காந்தி நினைவிடத்தில் மெட்டே ஃபிரெட்ரிக்சன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாட்டு நல்லுறவு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாட்டுப் பிரதமர்களுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மெட்டே ஃபிரெட்ரிக்சன், "சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் அடைய முடியும் என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவும் டென்மார்க்கும் உலகின் முக்கிய இரண்டு ஜனநாயக நாடுகள். 

இரு நாடுகளும் சர்வதேச விதிகள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பசுமை ஆற்றல் திட்டத்தில் இலக்குகளை நிர்ணயித்துள்ளார்" என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட பசுமை வியூக கூட்டணி குறித்து இன்று மீண்டும் நடத்தினோம்" என்றார். பசுமை வியூக கூட்டணி என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு திட்டம் ஆகும்.

டென்மார்க் பிரதமரின் இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.