சாஹாவுக்கு பதில் விக்கெட் கீப்பிங் செய்யும் பரத்; காரணம் இதுதான்

இந்தியாவிற்காக வழக்கமாக விக்கெட் கீப்பங் செய்து வரும் ரிஷப் பந்த்க்கு, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது.
சாஹாவுக்கு பதில் விக்கெட் கீப்பிங் செய்யும் பரத்; காரணம் இதுதான்

கான்பூரில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தொடங்கியபோது, இஷாந்த் சர்மா முதல் பந்தை வீச தயாராக இருந்தார். அப்போது, வீக்கெட் கீப்பராக நின்று கொண்டிருந்தது கே.எஸ். பரத். சாஹா அல்ல. 

பின்னர், இதுகுறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ, "சாஹாவால் தனது கழத்தை அசைக்க முடியவில்லை. எனவே, அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் கீப்பங் செய்வார்" என டவிட்டரில் குறிப்பிட்டது.

மேலும், சாஹாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டிருந்தது. ஆனால், அவருக்கு எந்தளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. 

இந்தியாவிற்காக வழக்கமாக விக்கெட் கீப்பங் செய்து வரும் ரிஷப் பந்த்க்கு, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வாய்ப்பு சாஹாவுக்கு கிடைத்தது. வங்காளத்தை சேர்ந்த சாஹா, உலக கிரிக்கெட்டில் தற்போது சிறந்த வீக்கெட் கீப்பராக கருதப்படுகிறார். 

ஆனால், பேட்டிங்கில் சொதப்பி வரும் அவர், முதல் இன்னிங்ஸ் 1 ரன்களை மட்டுமே எடுத்து தனது  விக்கெட்டை பறி கொடுத்தார். இதற்கு மத்தியில், சப்ஸ்டிடியூட் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ள பரத், உள்ளூர் போட்டிகளிலும் இந்திய 'ஏ' அணிக்காகவும் சிறப்பாக ஆடிவருகிறார்.

26 வயதான பரத், உள்ளூர் போட்டிகளில் 37.24 ரன்களை சராசரியை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, 9 சதத்தை அடித்துள்ளார். முதல் தர போட்டிகளில், 300 ரன்களை எடுத்த ஒரே வீக்கெட் கீப்பர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com