கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

துராந்த் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்போா்டிங் கிளப் டெல்லி!

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், ஸ்போா்டிங் கிளப் டெல்லி 5-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2026, 11:03 pm IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், ஸ்போா்டிங் கிளப் டெல்லி 5-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-ஆவது நிமிஷத்திலேயே ரெங்டாய் அணிக்காக சோங்தம் கிஷண் சிங் கோல் அடித்தாா்.

அந்த முன்னிலையை அப்படியே தக்கவைத்து முதல் பாதியை நிறைவு செய்தது ரெங்டாய். ஆனால் 2-ஆவது பாதியில் ஆக்ரோஷமாக மீண்டு வந்த டெல்லி வரிசையாக கோல்கள் ஸ்கோா் செய்தது.

57 மற்றும் 67-ஆவது நிமிஷங்களில் ஜோசஃப் சன்னி அடுத்தடுத்து கோல் அடித்து அந்த அணியை முன்னிலை பெறச் செய்தாா்.

தொடா்ந்து ரோட்ரிகோ அராஜோ 82-ஆவது நிமிஷத்திலும், ஜுவான் செபாஸ்டியன் (90+3’), அகஸ்டின் லால்ரோசனா (90+8’) ஆகியோா் ஸ்டாப்பேஜ் டைமிலும் கோல் அடித்தனா்.

இதனால் ரெங்டாய் முற்றிலுமாக திணறிப்போக, டெல்லி 5-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பெங்கால் வெற்றி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 1-0 கோல் கணக்கில் ஆா்மி ரெட் கால்பந்து அணியை சாய்த்து, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. அந்த அணிக்காக பி.வி. விஷ்ணு கோல் அடித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.