சாம்பியன் டிராபி போட்டிக்குப் பிறகு 4-ம் நிலை வீரராக விளையாடியுள்ள இந்திய வீரர்களின் பட்டியல்!

இன்றைய ஆட்டத்தில், 4-ம் நிலை வீரராக விஜய் சங்கர் களமிறங்கியுள்ளார்...
சாம்பியன் டிராபி போட்டிக்குப் பிறகு 4-ம் நிலை வீரராக விளையாடியுள்ள இந்திய வீரர்களின் பட்டியல்!
Updated on
1 min read

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் செளதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக, ஷமி இடம்பெற்றுள்ளார். விஜய் சங்கரும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரதுல்லா, அஃப்தாப் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

புள்ளிகள் பட்டியலில் 7 புள்ளிகளுடன் இந்திய அணி 4-ம் இடத்திலும் புள்ளிகள் எதுவுமின்றி ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில், 4-ம் நிலை வீரராக விஜய் சங்கர் களமிறங்கியுள்ளார். 

இதன்மூலம், 2017 சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு 4-ம் நிலை வீரராகக் களமிறங்கியுள்ள 12-வது வீரராகியுள்ளார் விஜய் சங்கர்.

அதாவது 24 மாதங்களில் 12 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது இந்திய அணி. அவர்களின் பட்டியல்:

யுவ்ராஜ் சிங், தினேஷ் கார்த்திக், கே.எல். ராகுல், விராட் கோலி, கெதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, எம்எஸ் தோனி, ரஹானே, அம்பட்டி ராயுடு, ரிஷப் பந்த், விஜய் சங்கர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com