மனதில் நீங்கா இடம்பிடிக்கும் விதமான பல நினைவுகளை கொடுத்தற்கு நன்றி என ஷிகர் தவானுக்கு இந்திய வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஆகஸ்ட் 24) அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த அவருக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி வந்தனர்.
இந்த நிலையில், மனதில் நீங்கா இடம்பிடிக்கும் விதமான பல நினைவுகளை கொடுத்தற்கு நன்றி என ஷிகர் தவானுக்கு இந்திய வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: அறிமுகப் போட்டியில் அச்சமின்றி விளையாடியது முதல் இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக மாறியது வரை எங்களுக்கு பல்வேறு மகிழ்ச்சியான நினைவுகளை கொடுத்துள்ளீர்கள்.
போட்டியில் உங்களது அர்ப்பணிப்பு, உங்களுக்கே உரித்தான புன்னகையை கண்டிப்பாக மிஸ் செய்வோம். ஆனால், உங்களது சிறப்பான ஆட்டங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து நிலைத்து நிற்கும். மனதில் நீங்கா இடம்பிடிக்கும் விதமான பல நினைவுகளை கொடுத்ததற்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக ஷிகர் தவான் 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் சொதப்பும் விராட் கோலி..! முற்றுப்புள்ளி வைப்பாரா?

டிராவிஸ் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஆர்சிபி ரசிகர்கள்! வலுக்கும் கண்டனம்!!

டி20 போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!

பதற்றமாக இருந்தேன்; சதம் விளாசிய பிறகு விராட் கோலி பேசியதென்ன?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




