ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா!

ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜெய் ஷா
ஜெய் ஷாபடம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலராக ஜெய் ஷா செயல்பட்டு வந்தார். ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்க்ளே மூன்றாவது முறையாக, ஐசிசியின் தலைவர் பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள 5-வது இந்தியர் என்ற பெருமை ஜெய் ஷாவைச் சேரும். அவருக்கு முன்பாக, ஐசிசியில் தலைவர் பொறுப்பில் ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், ஷஷாங் மனோகர், என்.ஸ்ரீநிவாசன் ஆகியோர் இருந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com