நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு மெதுவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து 499 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் நியூசி. 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் மெதுவாக பந்துவீசியதாக 15% போட்டி ஊதியத்திலிருந்து அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன போட்டியின் நடுவர் டேவிட் பூன் தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இந்த அபராதத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. புள்ளிகள் கிறைப்பினால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எத்தனை ஓவர்கள் தாமதமாக வீசப்படுகிறதோ அத்தனை புள்ளிகள் குறைக்கப்படுவது ஐசிசியின் விதி.
இங்கிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. ஆனால், நியூசிலாந்து அணிக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த அபராதம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமென கணிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமனில் முடிந்த வங்கதேசம்-நியூஸிலாந்து டி20 தொடா்

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

மெதுவாக ஓவா் வீச்சு: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ், அணி வீரா்களுக்கு அபராதம்

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


