ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

2-வது டெஸ்ட்: இருவர் சதம்; 358 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image

சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க வீரர் கைல் வெரைன் - படம் | AP

Updated On :6 டிசம்பர் 2024, 4:20 pm IST

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 5) செயிண்ட் ஜியார்ஜ் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சதம் விளாசிய ரியான் ரிக்கல்டான், கைல் வெரைன்

தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் மற்றும் கைல் வெரைன் இருவம் சதம் விளாசி அசத்தினர். ரியான் ரிக்கல்டான் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். கைல் வெரைன் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் டெம்பா பவுமா 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கை தரப்பில் லகிரு குமாரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஷிதா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், விஸ்வா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி இரண்டாம் நாளில் உணவு இடைவேளையின்போது, முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. திமுத் கருணாரத்னே 5 ரன்களுடனும், பதும் நிசங்கா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 339 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.