பாகிஸ்தான் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் பன்னாட்டு (சர்வதேச) கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
32 வயதான பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் 36 டெஸ்ட்டில் 119 விக்கெட்டுகளும் 61 ஒருநாள் போட்டிகளில் 81 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
சிறை சென்ற ஆமிர்
2010இல் 19வயதாக இருக்கும்போது வேண்டுமென்றே நோ -பால் வீசி ஸ்பாட்-பிக்சிங்கில் ஈடுபட்டதால் 2010-2015 காலகட்டத்தில் கிரிக்கெட்டில் இருந்து தடைசெய்யப்பட்டார். அதற்காக சிறை சென்றதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் 2020இல் தேசிய தேர்வுக்குழுவின் அழுத்தத்தினால் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பின்னர், மனதை மாற்றிக்கொண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களுக்கு வழி
இந்த நிலையில் முகமது ஆமிர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
பன்னாட்டு (சர்வதேச) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் கடினமான முடிவினை சீரிய ஆலோசனைக்குப் பிறகு எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதானதல்ல. ஆனால், தவிர்க்க முடியாதது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டினை புதிய உயரத்துக்கு முன்னேற்ற நான் இளைய தலைமுறைகளுக்கு வழிவிடுவதற்கு இதுதான் சரியான நேரம்.
எனது வாழ்க்கையில் பாகிஸ்தான் நாட்டினை பிரதிநிதிப்படுத்தி விளையாடியதை மிகவும் கௌரமாக கருதுகிறேன்.
தொடர்ச்சியான அன்பிற்கும் ஆதரவுக்கும் பிசிபி, எனது குடும்பம், நண்பர்கள், எனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
2009இல் அறிமுகமான ஆமிர் 2017இல் சாம்பியன் டிராபியில் நாயகனாக விளங்கினார்.
மொத்தமாக 271 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆமிர் 1,179 ரன்கள் எடுத்துள்ளார்.
இமாத் வாசிம் ஓய்வை அறிவித்த அடுத்தநாளே ஆமிரும் ஓய்வை அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த இருவரும் அணியில் தேர்வாகவில்லை. ஆமிர் கடைசியாக அமெரிக்காவில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.
Announcement of my retirement from international cricket ð. pic.twitter.com/CsPfOTGY6O
— Mohammad Amir (@iamamirofficial) December 14, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதலியை மணந்தார் நடிகர் ஆமிர் கான்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமா் பேரன் கைது

பொறியியல் கலந்தாய்வு எப்போது? தேதியை அறிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்

காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் விலகல்; இங்கிலாந்துக்கு பின்னடைவா?
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



