தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

3ஆவது இடத்தில் இந்தியா: டபிள்யூடிசி இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

ஆஸி. உடனான 3ஆவது டெஸ்ட் சமனில் முடிந்ததால் டபிள்யூடிசி தரவரிசையில் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது இந்திய அணி.

News image

இந்திய அணி - படம்: ஏபி

Updated On :18 டிசம்பர் 2024, 3:37 pm IST

பிரிஸ்பேனில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி மழை சமனில் முடிந்தது. இந்திய அணி டபிள்யூடிசி தரவரிசையில் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது.

டபிள்யூடிசி (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமானால் முதலிரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும்.

பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் கடைசி நாளிலும் மழை குறுக்கிட்டதால் டிரா என அறிவிக்கப்பட்டது.

டபிள்யூடிசி தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 2ஆம் இடத்திலும் தென்னாப்பிரிக்கா முதலிடத்திலும் நீடிக்கிறது.

இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறதா?

1. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும்.

2. ஆஸ்திரேலியா இந்தியாவுடன் 2 போட்டிகளிலும் வென்றுவிட்டால் இலங்கையுடன் தோல்வியுற்றாலும் அது இந்தியாவை பாதிக்காது.

3. இந்தியா 1 வெற்றி, 1 டிரா செய்தால், ஆஸி. இலங்கையுடனான ஒரு டெஸ்ட்டிலாவது டிரா செய்ய வேண்டும்.

டபிள்யூடிசி தரவரிசை

1. தென்னாப்பிரிக்கா - 63.33 புள்ளிகள்

2. ஆஸ்திரேலியா - 58.89 புள்ளிகள்

3. இந்தியா - 55.88 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.