அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லை; இந்திய அணிக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி!

முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லாததால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் இணையமாட்டார்.

News image

முகமது ஷமி (கோப்புப் படம்)

Updated On :23 டிசம்பர் 2024, 7:19 pm IST

முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லாததால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் இணையமாட்டார் என்பதை பிசிசிஐ இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது. முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளுக்காக இந்திய அணியுடன் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லாததால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் இணையமாட்டார் என்பதை பிசிசிஐ இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முகமது ஷமியை பிசிசிஐயின் மருத்துவக் குழு முழுவதுமாக பரிசோதனை செய்தது. அதன் படி, அவர் முழு வீச்சில் பந்துவீசுவதற்கு அவரது முழங்காலுக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவது தெரிய வந்தது. அதன் காரணமாக, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் அவரால் இந்திய அணிக்காக விளையாட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் கடைசியாக முகமது ஷமி இந்திய அணிக்காக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.