
தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை பார்க்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார். அவர் அடுத்த சீசனில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
முன்னாள் வீரர் விருப்பம்
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடவுள்ள நிலையில், விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை தென்னாப்பிரிக்க டி20 தொடரில் பார்க்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த இந்திய வீரர் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் எனக் கூறுவதில் எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. பேட்ஸ்மேன் என எடுத்துக் கொண்டால், விராட் கோலி தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில், 100 சதவிகிதம் பும்ரா விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.
இதையும் படிக்க: அஸ்வினுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர்!
இந்திய வீரர்கள் பலரும் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடத் தொடங்கினால், இந்த தொடர் மிகவும் பிரபலமடைந்துவிடும். ஒரு அணிக்கு இரண்டு இந்திய வீரர்கள் விளையாடினாலே இந்த தொடர் மிகவும் பிரபலமாகிவிடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.