ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

முதல் அரைமணி நேரத்தை மதியுங்கள்; ரிஷப் பந்த்துக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு ரிஷப் பந்த் மதிப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

News image

ரிஷப் பந்த் - படம் | ஐசிசி

Updated On :24 டிசம்பர் 2024, 5:57 pm IST

ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு ரிஷப் பந்த் மதிப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என அனைவரும் பெரிய அளவின் ரன்கள் குவிக்கத் தவறுகின்றனர். அதிரடி ஆட்டத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட ரிஷப் பந்த், அவருக்கு கிடைக்கும் நல்ல துவக்கத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் ரன்கள் சேர்க்கத் தவறுகிறார்.

முதல் அரைமணி நேரத்தை மதியுங்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு ரிஷப் பந்த் மதிப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மற்ற வீரர்களைப் போன்று ரிஷப் பந்த்தும் ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர் களமிறங்கும்போது இந்திய அணியின் நிலை எப்படி இருந்தாலும், முதல் அரைமணி நேரத்துக்கு அவர் சிறிது மதிப்பளிக்க வேண்டும். இந்திய அணி 525 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தால், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடலாம் என்றார்.

இதுவரை விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளின் ஐந்து இன்னிங்ஸ்களில் ரிஷப் பந்த் 37, 1, 21, 28 மற்றும் 9 ரன்கள் முறையே குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.