
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங் தேர்வுசெய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் செஞ்சுரியன் திடலில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
14 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 36 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் செஷன் முடிவில் பாகிஸ்தானின் ஷான் மசூத் - 17 (58) ரன்களும் சைம் அயூப் 14 (31) ரன்களும் எடுத்துள்ளார்கள்.
14.1 ஆவது ஓவரில் ஷான் மசூத் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை இழந்தது.
இந்த டெஸ்ட்டில் தெ.ஆ. வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.