நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை அறிவித்த ஐசிசி!

News image
- படம் | ஐசிசி
Updated On :28 டிசம்பர் 2024, 2:41 pm

DIN

இந்த ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று (டிசம்பர் 28) வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளிலிருந்து வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான முதல் கட்ட போட்டியாளர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

வளர்ந்து வீரர்களுக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன், பாகிஸ்தானின் சைம் ஆயுப், மேற்கிந்தியத் தீவுகளின் ஷமர் ஜோசப் மற்றும் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் அன்னேரி டெர்க்சென், ஸ்காட்லாந்தின் சசிகா ஹோர்லி, இந்தியாவின் ஸ்ரேயங்கா பாட்டீல், அயர்லாந்தின் ஃப்ரேயா சார்ஜண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெற்றியாளர்கள் யார் என்பது அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.