இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த், இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகவும் முக்கியமான தருணத்தில் ஆட்டமிழந்தார். முக்கியமான தருணத்தில் ஆட்டமிழந்தார் என்பதோடு, அவர் தேர்வு செய்து விளையாடிய ஷாட்டுகள் பெரும் பேசுபொருளானது.
இக்கட்டான நிலையில் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த் விளையாடிய ஷாட்டினை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முட்டாள்தனமான ஷாட் என கடுமையாக சாடியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியான ஷாட்டுக்கு முயற்சி செய்து முக்கியமான தருணத்தில் ரிஷப் பந்த் விக்கெட்டினை இழந்தார்.
ரிஷப் பந்த் புரிந்துகொள்ள வேண்டும்
ஆட்டத்தின் மிகவும் முக்கியமான தருணங்களில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பந்த்திடமிருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி ரிஷப் பந்த்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அவர் விளையாடும் விதம் குறித்து நாம் அனைவரும் பேசுவதைக் காட்டிலும், அவரே அதனை புரிந்துகொண்டு சரிசெய்வதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். ஆட்டத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு விளையாட வேண்டும். ரிஸ்க்கான ஷாட்டுக்கு முயற்சி செய்யும்போது, நாம் எதிரணியை ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்த ரிஷப் பந்த்! காரணம் என்ன?
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம்: பயிற்சியாளர்

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!







