மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரிஷப் பந்த் இதனை புரிந்துகொள்ள வேண்டும்; எதைக் கூறுகிறார் ரோஹித் சர்மா?

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

News image
ரிஷப் பந்த்- படம் | AP
Updated On :30 டிசம்பர் 2024, 12:28 pm

DIN

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த், இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகவும் முக்கியமான தருணத்தில் ஆட்டமிழந்தார். முக்கியமான தருணத்தில் ஆட்டமிழந்தார் என்பதோடு, அவர் தேர்வு செய்து விளையாடிய ஷாட்டுகள் பெரும் பேசுபொருளானது.

இக்கட்டான நிலையில் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த் விளையாடிய ஷாட்டினை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முட்டாள்தனமான ஷாட் என கடுமையாக சாடியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியான ஷாட்டுக்கு முயற்சி செய்து முக்கியமான தருணத்தில் ரிஷப் பந்த் விக்கெட்டினை இழந்தார்.

ரிஷப் பந்த் புரிந்துகொள்ள வேண்டும்

ஆட்டத்தின் மிகவும் முக்கியமான தருணங்களில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பந்த்திடமிருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி ரிஷப் பந்த்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அவர் விளையாடும் விதம் குறித்து நாம் அனைவரும் பேசுவதைக் காட்டிலும், அவரே அதனை புரிந்துகொண்டு சரிசெய்வதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். ஆட்டத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு விளையாட வேண்டும். ரிஸ்க்கான ஷாட்டுக்கு முயற்சி செய்யும்போது, நாம் எதிரணியை ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.