அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

ஐசிசி மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசை வெளியீடு!

மகளிர் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பௌலிங் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ளது.

News image

படம் | பிசிசிஐ

Updated On :23 ஜூலை 2024, 4:51 pm IST

மகளிர் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பௌலிங் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் பேட்டிங்கில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ஷஃபாலி வர்மா பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஹர்மன்பிரீத் கௌர் ஒரு இடமும், ஷஃபாலி வர்மா 4 இடங்களும் முன்னேறி இருவரும் 11-வது இடத்தில் உள்ளனர்.

பேட்டிங் தரவரிசையில் முதல் 20 இடங்களில் 4 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 4-வது வீராங்கனையாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ளார். ரிச்சா கோஷ் 24-வது இடத்தில் உள்ளார். 769 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதலிடத்தில் தொடர்கிறார்.

பந்துவீச்சை பொறுத்தவரையில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3-வது இடத்தில் தொடர்கிறார். ரேனுகா சிங் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இடது கை சுழற்பந்துவீச்சாளரான ராதா யாதவ் 20-வது இடத்தில் உள்ளார். ஸ்ரேயங்கா பாட்டீல் 19 இடங்கள் முன்னேறி 41-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கல்ஸ்டோன் 772 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.