அதிரடியாக விளையாடுவதை இந்திய அணி தொடரும் என இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை (ஜூலை 27) முதல் தொடங்குகிறது. கௌதம் கம்பீர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், அதிரடியாக விளையாடுவதை இந்திய அணி தொடரும் என இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்போவதில்லை. அதிரடியான ஆட்டத்தைத் தொடர்வோம். கேப்டன் பொறுப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. கேப்டனாக கூடுதல் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கேப்டனாக இருப்பது எனது ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.
ரோஹித் சர்மாவிடம் நான் கற்றுக் கொண்டது இதுதான். ஆடுகளத்திலும், ஆடுகளத்துக்கு வெளியேயும் அவர் சிறந்த தலைவராக செயல்படக் கூடியவர். அவர் கேப்டன் மட்டுமின்றி சிறந்த தலைவராகவும் செயல்படுபவர். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும், எப்படி தொடரை வெல்ல வேண்டும் என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டுள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேப்டனாக முதல் டி20 தொடர் வெற்றி; ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதென்ன?

ஆதிக்கம் முடிந்தது! ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து!

இந்திய அணி தொடர்ச்சியாக டி20 தொடர்களை இழக்க இதுதான் காரணம்: ஷ்ரேயாஸ் ஐயர்

சிறப்பான பயணத்தை தொடங்கியுள்ளீர்கள்; சூர்யவன்ஷிக்கு சூர்யகுமார் யாதவ் வாழ்த்து!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




