ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு வீரர்களை முக்கியமானவர்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: ஆஸி. தடுமாற்றம்: பாகிஸ்தான் வரலாற்று வெற்றி..!
கே.எல்.ராகுல் தேவை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டை அதன் தன்மை மாறாமல் விளையாடக் கூடிய வீரர்களான கே.எல்.ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் இந்திய அணிக்கு முக்கியம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ராபின் உத்தப்பா (கோப்புப் படம்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய வீரர்கள் தேவை. அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மை மாறாமல் அதற்குரிய பாரம்பரியத்துடன் விளையாட வேண்டும். தற்போது இந்திய அணியில் அதுபோன்ற ஆட்டத்தை கே.எல்.ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் வெளிப்படுத்தி வருகின்றனர். மற்ற வீரர்கள் யாரும் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள் என நினைக்கவில்லை.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஆப்கன் வீரர்!

கே.எல்.ராகுல் (கோப்புப் படம்)
அனைவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற மனநிலையில் விளையாடுகின்றனர். ஷுப்மன் கில்லை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர். அவரை பொறுமையாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தக் கூறினால், அவருக்கு அது பிடிக்காமல் போகலாம். அவரது இயல்பான ஆட்டம் பாதிக்கப்படலாம். டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அணியில் சேர்க்கப்படலாம். அவர் மிகச் சிறந்த வீரர் என்றார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸ் அழுத்தத்தில் இருக்கிறதா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


