ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

இந்திய அணிக்கு வலிமை சேர்க்க அவர் வந்துவிட்டார்... யாரைக் கூறுகிறார் ரவி சாஸ்திரி?

இந்திய அணிக்கு வலிமை சேர்க்க மூத்த வீரர் வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

News image

ரவி சாஸ்திரி - கோப்புப் படம்

Updated On :15 நவம்பர் 2024, 6:29 pm IST

இந்திய அணிக்கு வலிமை சேர்க்க மூத்த வீரர் வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் தனது பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

மீண்டும் முகமது ஷமி

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரின்போது அவருக்கு காயம் ஏற்பட, அதன் பின் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு முகமது ஷமி முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ளார். பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடிய முகமது ஷமி, மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 19 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

காயம் காரணமாக கடந்த ஓராண்டாக அணியில் இடம்பெறாமலிருந்த முகமது ஷமி, பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி சாஸ்திரி கூறியதென்ன?

முகமது ஷமி முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ள நிலையில், பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவர் இந்திய அணியுடன் இணைவது தொடர்பாக அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

முகமது ஷமி (கோப்புப் படம்)

முகமது ஷமி (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பக்க பலமாக பந்துவீச்சில் ஆதரவு தேவைப்படுகிறது. முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டு மீண்டும் முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ளார். அவர் முழு உடல் தகுதியுடன் பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியுன் இணைவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றபோது, முகமது ஷமி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் 4 போட்டிகளில் அவர் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதுவரை இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 229 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.