ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் நாளை (நவம்பர் 24) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 25) சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் மெகா ஏலம் நாளை தொடங்கவுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளுக்குள் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.25 கோடிக்கும் மேல்...
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் நாளை தொடங்கவுள்ள நிலையில், மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சுரேஷ் ரெய்னா (கோப்புப் படம்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த்தின் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைகளை தவிர்த்து, அவர் மிகவும் சிறப்பான பண்புகளைக் கொண்டவர். அவர் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தும் பண்புகளைக் கொண்டுள்ளார். அதனால், எந்த ஒரு அணி உரிமையாளரோ அல்லது பயிற்சியாளரோ அவரை இழக்க விரும்பமாட்டார்கள். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்படுவார் என நினைக்கிறேன்.
பஞ்சாப், தில்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளிடத்தில் ரிஷப் பந்த்தினை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு தொகை இருக்கிறது. ஏலத்தில் போட்டி நிலவும் பட்சத்தில், ரூ.25 கோடியைக் கடந்து இன்னும் 4-5 கோடிகள் அதிகத் தொகைக்கு ரிஷப் பந்த் ஏலம் போவார். அவரை யாரும் இழக்க விரும்பமாட்டார்கள்.
இது மூன்று ஆண்டுகளுக்கான ஏலம். ரிஷப் பந்த்தை எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ அந்த அணிக்காக அவர் மூன்று ஆண்டுகள் விளையாடுவார். ரிஷப் பந்த்தை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸிடம் பட்ஜெட் இல்லை. ஆனால், அவர் கண்டிப்பாக ஆர்சிபி அல்லது கொல்கத்தா அணியின் கேப்டனாக மாறப்போகிறார் எனத் தெரிகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் மாறும் பட்சத்தில் அந்த அணிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

காவல்துறை வாகன ஏலத்தில் மகனுக்காக கண்ணீர்விட்ட தாய்! நெகிழ்ச்சியான சம்பவம்!

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகல்!

ஆபாசமாகப் பேசிய ரிஷப் பந்த்..! சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



