மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேகேஆர் அணியில் விளையாடியது குறித்து தமிழக வீரர் பாபா இந்திரஜித் பேட்டி!

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடியபோது மிகப்பெரிய கற்றம் அனுபவம் கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

News image
பாபா இந்திரஜித்- படங்கள்: எக்ஸ் / பாபா இந்திரஜித்
Updated On :27 நவம்பர் 2024, 12:30 pm

DIN

பாபா இந்திரஜித் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். முதல்தர கிரிக்கெட்டில் 81 போட்டிகளில் 5,545 ரன்கள் குவித்துள்ளார். அதில் 16 சதங்கள், 29 அரைசதங்கள் அடங்கும். சராசரி 52.31 என்பது குறிப்பிடத்தக்கது.

25 டி20 போட்டிகளில் இந்திரஜித் 451 ரன்களுடன் சராசி 21.47ஆக இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 115ஆகவும் இருக்கிறது. இதில் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடியபோது மிகப்பெரிய கற்றம் அனுபவம் கிடைத்ததாகக் கூறியுள்ளார். இந்திரஜித் 3 போட்டிகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இந்தாண்டு டிஎன்பில் கோப்பையை வென்ற அணியில் இருந்தார். இந்த ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகவில்லை.

சோனி ஸ்போர்ட்ஸ் தமிழி கிரிக்கெட் பாட்காஸ்ட் - நிகழ்ச்சியில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் பேசியதாவது:

2022இல் நான் கேகேஆர் அணியில் இருந்தேன். அந்த முறை லீக் போட்டிகளிலே கேகேஆர் அணி வெளியேறியது. அது மிகவும் உணர்ச்சிகரமான அனுபவம். மெக்குல்லம், பாட் கம்மின்ஸ் உடன் ஓய்வறையை பகிர்ந்துகொண்டது எனக்கு மிகப்பெரிய கற்றல் அனுபவம். டேவிட் ஹஸி, பிரெண்டன் மெக்குல்லம் கேகேஆர்-லிருந்து சிஎஸ்கேவுக்கு சேர்ந்தார்கள். எனக்கு அவர்களுடன் நல்ல பழக்கம் இருந்தது. மைக்கல் ஹசி மிகச்சிறந்த மனிதர்.

நான் விளையாட ஆரம்பிக்கும்போது எஸ். பத்ரிந்தாத், எல். பாலாஜி, தினேஷ் கார்த்திக் என பல மூத்த வீரர்கள் இருந்தார்கள்.

அப்போதுதான் ஒரு போட்டியை அணுகும் விதம் மாறியது. புதுவிதமான கிரிக்கெட் பிரபலமாக தொடங்கிய நேரமது. குறிப்பாக மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. முன்பெல்லாம் ஆட்டமிழந்தால் 10 முறை ஆடுகளத்தை சுற்று என பயிற்சியாளர்கள் சொல்வதுபோல் இப்போது கிடையாது.

அஸ்வின் ஒரு லெஜெண்ட். எப்போதும் சவாலை விரும்பக்கூடியவர். அவரைபோல் இருப்பது எளிதில்லை. அவர் மிகவும் தைரியமான வீரர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.