கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

டெஸ்டில் அதிக 150* ரன்கள்: ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்!

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:07 pm IST

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சமன் செய்தார். மேலும், அவர் வீரேந்திர சேவாக், ஜாக் காலிஸ், ஸ்டீவ் வாக் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்தார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 97 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோ ரூட் 172* ரன்களும், ஹாரி புரூக் 132* ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் 150 ரன்களைக் கடந்த போது ஜோ ரூட் அதிக 150 ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 150* ரன்கள் அடித்தவர்கள்

  1. சச்சின் டெண்டுல்கர் -20

  2. பிரையன் லாரா -19

  3. குமார் சங்ககரா -19

  4. டான் பிராட்மேன் -19

  5. எம் ஜெயவர்த்தனே -16

  6. ஜோ ரூட் -15*

  7. ரிக்கி பாண்டிங் -15

  8. வீரேந்திர சேவாக் -14

  9. ஜாக் காலிஸ் -14

  10. ஸ்டீவ் வாக் -14

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.