சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

மோசமான தோல்வி எதிரொலி: பாக். கிரிக்கெட் வாரியம் புதுப்பிப்பு!

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் மோசமாக தோல்வியுற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Updated On :11 அக்டோபர் 2024, 2:58 pm IST

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் மோசமாக தோல்வியுற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் அதிகமான ரன்கள் அடித்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியுற்ற முதல் அணியாக பாகிஸ்தான் மிகவும் மோசமான சாதனை செய்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் வீரர்களான ஆகிப் ஜாவத், அஜார் அலி, டெஸ்ட் போட்டி நடுவர் ஆலம் தர் , அனலிஸ்ட் ஹசன் சீமா ஆகியோர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

முகமது யூசுப் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து தேசிய தேர்வாளர் குழுவில் அசாத் ஷபிக் சமீபத்தில் இணைந்தார்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறதென பிசிபி தெரிவித்துள்ளது. ஆனால், தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டியன், ஜேசன் கில்லஸ்பி வாக்களிப்பார்களா என தெளிவாகக் குறிப்பிடவில்லை.

சமீபத்தில் சர்வதேச நடுவர் பொறுப்பிலிருந்து ஆலிம் தார் ஓய்வு பெறுவதாகக் கூறினார். கடைசி வருடத்திலிருந்து பலமுறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றியமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய குழுவின் பொறுப்பு அடுத்த இங்கிலாந்துக்கான எதிரான டெஸ்ட் அணியையும் ஆஸி., தெ.ஆ. தொடர்களுக்கான அணியையும் தேர்வு செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.