இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்கும் வழியை ஆஸ்திரேலிய அணி கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம்பெற்றுள்ள இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க: துணை கேப்டனாக பும்ரா..! சரியான தேர்வா? ரோஹித் சர்மா கூறியதென்ன?
ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்க வேண்டும்
பார்டர் - கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்ல வேண்டுமென்றால், ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்கும் வழியை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்) - படம் | ஐசிசி
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ராவின் மிகப் பெரிய ரசிகன் நான். அவர் மிகவும் சிறந்த பந்துவீச்சாளர் என நினைக்கிறேன். அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அவரை அமைதியாக்க முடிந்தால், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணியில் உள்ள வீரர்கள் பலரும் ஆஸ்திரேலியாவில் அதிகம் விளையாடியது கிடையாது. இந்த தொடர் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிக்க: பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்: கேமரூன் கிரீன் விலகல்
புஜாராவுக்கு புகழாரம்
புஜாராவுக்கு எதிரக விளையாடுவது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். அவர் தொடர்ச்சியாக விக்கெட்டை இழக்காமல் பேட்டிங் செய்துகொண்டே இருப்பார். அவருக்கு எதிரான போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும். சில நாள்களில் எனக்கு எதிராக அவர் வெற்றி பெறுவார். சில நாள்களில் அவருக்கு எதிராக நான் வெற்றி பெறுவேன். இத்தனை ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இல்லாத டெஸ்ட் தொடர் சற்று வித்தியாசமானதாக இருக்கப் போகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்; எச்சரிக்கும் ஆஸி. வீராங்கனை!

டி20 தொடர்களில் பும்ரா, ஹார்திக் சேர்க்கப்படாதது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!

உலகளாவிய வளா்ச்சிக்குத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் இருப்பது அவசியம்: ‘க்வாட்’ கூட்டத்தில் ஜெய்சங்கா்






