தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்..! 99 ரன்களில் ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்காக டெஸ்ட்டில் ரிஷப் பந்த் அதிவேகமாக ரன்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

News image

ரிஷப் பந்த் - Shailendra Bhojak

Updated On :19 அக்டோபர் 2024, 3:42 pm IST

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் புதிய சாதனையை படைத்துள்ளார். 62 இன்னிங்ஸில் 2,500 ரன்களை கடந்துள்ளார்.

இதற்கு முன்பாக எம்.எஸ்.தோனி 69 இன்னிங்ஸில் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

பெங்களூரில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்ல் 46க்கு ஆட்டமிழக்க 2ஆம் இன்னிங்ஸில் 90.2ஓவர்களுக்கு 438/6 ரன்கள் எடுத்துள்ளது.

சர்ஃபராஸ் கான் 150 ரன்களுக்கு ஆட்டமிழக்க ரிஷப் பந்த் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டின்போது சின்னசாமி மைதானமே அமைதியில் மூழ்கியது.

ரிஷப் பந்த தனது 12ஆவது அரைசதத்தை வெறுமனே 55 பந்துகளில் அடித்து அசத்தினார்.

2018 முதல் டெஸ்ட் அணியில் இருக்கும் ரிஷப் பந்த் சமீபத்திய கார் விபத்தில் இருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

இந்தியாவுக்கு அதிவேகமாக 2,500 ரன்களை கடந்த விக்கெட் கீப்பர்கள்

ரிஷப் பந்த் - 62 இன்னிங்ஸ்

எம்.எஸ்.தோனி - 69 இன்னிங்ஸ்

ஃபரூக் என்ஜினியர் -82 இன்னிங்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.