மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ஐசிசி தரவரிசை: விராட் கோலியை முந்தினார் ரிஷப் பந்த்!

ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 6ஆம் இடத்தைப் பிடித்தார் ரிஷப் பந்த்.

News image

விராட் கோலி, ரிஷப் பந்த்.

Updated On :23 அக்டோபர் 2024, 5:50 pm IST

ரிஷப் பந்த் இதுவரை 36 போட்டிகளில் 2,551 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 சதங்கள், 12 அரைசதங்கள் அடங்கும். 90-100 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இது 7ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பந்த் 62 இன்னிங்ஸில் 2,500 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்பாக எம்.எஸ்.தோனி 69 இன்னிங்ஸில் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

இந்நிலையில் ஐசிசியின் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஐசிசியின் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் ரிஷப் பந்த். விராட் கோலி 8ஆவது இடத்துக்குப் பின் தங்கியுள்ளார்.

இந்தியாவின் ஜெய்ஸ்வால் 4ஆவது இடத்தில் இருக்கிறார். ஜோ ரூட் 917 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்

1. ஜோ ரூட் - 917 புள்ளிகள்

2. கேன் வில்லியம்சன் - 821 புள்ளிகள்

3. ஹாரி புரூக் - 803 புள்ளிகள்

4. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 780 புள்ளிகள்

5. ஸ்டீவ் ஸ்மித் - 757 புள்ளிகள்

6. ரிஷப் பந்த் - 745 புள்ளிகள்

7. உஸ்மான் கவாஜா - 728 புள்ளிகள்

8. விராட் கோலி - 720 புள்ளிகள்

9. மார்னஸ் லபுஷேன் - 720 புள்ளிகள்

10. கமிந்து மெண்டிஸ் - 716 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.