ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

எங்கு சென்றாலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் கௌதம் கம்பீர்: ஜாண்டி ரோட்ஸ்

எங்கு சென்றாலும் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் கௌதம் கம்பீர் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

News image

கௌதம் கம்பீர் - படம் | கேகேஆர் (எக்ஸ்)

Updated On :1 செப்டம்பர் 2024, 6:12 pm IST

எங்கு சென்றாலும் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் கௌதம் கம்பீர் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீரின் கீழ் இந்திய அணி மேலும் வலிமையான அணியாக மாறும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். புரோ கிரிக்கெட் லீக் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

ஜாண்டி ரோட்ஸ் (கோப்புப் படம்)

ஜாண்டி ரோட்ஸ் (கோப்புப் படம்)

அந்த விழாவில் ஜாண்டி ரோட்ஸ் பேசியதாவது: எங்கு சென்றாலும் கௌதம் கம்பீர் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டபோது, அவர் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை பார்த்தோம்.

அணியின் வெற்றிக்காக பல்வேறு யுக்திகளை முயற்சிப்பவர் கௌதம் கம்பீர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரது தலைமையின் கீழ் இந்திய அணி மேலும் வலிமையான அணியாக மாறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.