ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

19 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை: ஆயுஷ் பதோனி

19 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை என இந்திய வீரர் ஆயுஷ் பதோனி தெரிவித்துள்ளார்.

News image

ஆயுஷ் பதோனி (கோப்புப் படம்) - படம் | ஐபிஎல்

Updated On :1 செப்டம்பர் 2024, 4:29 pm IST

19 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை என இந்திய வீரர் ஆயுஷ் பதோனி தெரிவித்துள்ளார்.

தில்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் பதோனி அதிரடியாக 55 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 19 சிக்ஸர்கள் அடங்கும்.

இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார்.

இந்த நிலையில், 19 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை என ஆயுஷ் பதோனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துகளை சரியாக டைமிங் செய்து ஷாட்டுகளை விளையாடினேன். ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் விளாசுவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடினமான ஷாட்டுகளை விளையாடாமல் பந்துகளை நன்றாக டைம் செய்து விளையாடினேன். ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் குறித்து எதுவும் நினைக்கவில்லை. தில்லி பிரிமீயர் லீக்கில் அணியின் கேப்டனாக எனது அணிக்கு வெற்றி பெற்றுத்தர வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ஐபிஎல் தொடரில் விளையாடியது தில்லி பிரீமியர் லீக்கில் விளையாடுவதை மிகவும் எளிமையாக்கியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.