முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்ததாகக் கூறியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,701 ரன்கள் 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
சிறந்த ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங் டி20 போடியில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் அடித்து பிரபலமானார்.
பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். ஹேசல் கீச் என்பவருடன் 2016இல் திருமணம் செய்தார். ஒரு ஆண் குழந்தை, பெண் குழந்தை இருக்கிறார்கள்.
இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் யுவராஜ் சிங் பேசியதாவது:
2007 ஆஸி. சுற்றுப்பயணத்தின்போது நான் ஒரு பிரபல நடிகையை டேட்டிங் (இணை பழகல்) செய்தேன். அந்த நடிகை அப்போது மிகவும் பிரபலமான அனுபவமிக்க நடிகை. அவரது பெயரை சொல்லமாட்டேன். அவருக்கு அடிலெய்டில் படப்பிடிப்பு இருந்தது. கொஞ்ச காலம் நாம் சந்திக்க வேண்டாம் ஏனெனில் நான் ஆஸி. தொடரில் இருக்கிறேன், நான் அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்றேன்.
ஆனால், அந்த நடிகை பேருந்தில் என்னைப் பின் தொடர்ந்து கான்பெரா வரைக்கும் வந்தார். அந்த 2 டெஸ்ட்டிலும் என்னால் போதிய ரன்கள் குவிக்க முடியவில்லை. இங்கு என்ன செய்கிறாய் எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘உன்னிடம் நேரம் செலவளிக்க வேண்டும்’ எனக் கூறினார்.
இதையும் படிக்க: வினேஷ் போகத்துக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை நோட்டீஸ்!
பின்னர், இரவு சந்தித்து பேசினோம். உனது பணியில் நீ கவனம் செலுத்த வேண்டும். நானும் எனது பணியில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நான் ஆஸி. தொடரில் இருக்கிறேன். அதன் முக்கியத்துவம் பற்றி புரிந்துகொள். பின், கான்பெராவிலிருந்து அடிலெய்டிக்கு மாறினோம். அப்போது அவர் எனது துணிகளை பேக்கிங் செய்தார். அதில் எனது காலணிகளை அவரது பையில் வைத்து பேக்கிங் செய்துவிட்டார்.
அடுத்து அவரது பிங்க் நிற காலணிகளை அணிந்துதான் நான் விமான நிலையத்துக்கு சென்றேன். சக வீரர்கள் அனைவரும் என்னைப் பார்த்து கை தட்டி சிரித்தார்கள். விமான நிலையத்தில் புதிய செருப்பு வாங்கி அணியும்வரை அதைத்தான் அணிந்திருதேன் என சிரிப்புடன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலி செய்யும் நோட்டீஸுக்கு எதிராக பிரபல ஹோட்டல் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

இயக்குநர் விக்ரமன் என்னை விரட்டினாரா? மகேந்திரன் விளக்கம்!

தீயணைப்புத் துறையை வலுப்படுத்த முன்னாள் அக்னி வீரா்களை பணியில் சோ்ப்பது குறித்து ஆராயலாம்: தரன்ஜித் சிங் சந்து
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK



