அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

ஆசியாவின் தலைசிறந்த வீரராக அஸ்வின்..! புதிய சாதனை!

தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியராக புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆர். அஸ்வின்

Published On :

தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீசி வருகிறது. 35 ஓவருக்கு 107/3 ரன்கள் எடுத்து வங்கதேசம் விளையாடி வருகிறது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் நஜ்முல் ஹைசைன் ஷண்டோ விக்கெட்டினை வீழ்த்திய அஸ்வின் ஆசியாவில் 420 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்பு அனில் கும்ப்ளே 419 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தற்போது, இதை விஞ்சி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

ஆசியாவிலேயே அதிக விக்கெட்டுகள் முதல் இந்தியராகிய அஸ்வின் ஆசியாவில் 2ஆம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவில் முதலிடத்தில் முத்தையா முரளிதரன் 612 விக்கெட்டுகள் முதலிடத்தில் இருக்கிறார்.

மொத்தமாக 101 டெஸ்ட்டில் அஸ்வின் 522 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவில் டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்

612 - முத்தையா முரளிதரன்

420 - ரவி அஸ்வின்

419 - அனில் கும்ப்ளே

354 - ரங்கனா ஹெராத்

300 - ஹர்பஜன் சிங்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.