விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்! - பிசிசிஐ

ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

News image

ரோஹித் சர்மா - ரிஸ்வான்

Updated On :25 ஏப்ரல் 2025, 1:33 pm

ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2008 ஆம் ஆண்டு மும்பையில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டது. மேலும், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி விளையாட மறுத்ததால், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபையில் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இனி எந்த இருதரப்பு கிரிக்கெட் தொடர்களிலும் பாகிஸ்தானுடன் மோதப் போவதில்லை என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் ஐசிசிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு போட்டிகளில் விளையாடாவிட்டாலும், இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் ஒரே குழுவில்தான் விளையாடுகின்றன. இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்களிடம் அதிக ஆதரவும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இனி நடக்கவிருக்கும் ஐசிசி தொடர்களில் இரு அணிகளையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி தரப்பில் எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக, ஐசிசி தலைமையேற்று நடத்திய கூட்டத்தில் இனி நடைபெறும் அனைத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளும் ஹைபிரிட் மாடலில் வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் குரூப் சுற்றுப் போட்டி இடம் பெற உள்ளது. அதை மாற்றி அமைக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக பாகிஸ்தான் தலைமையேற்று நடத்திய ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததால் இலங்கையில் நடைத்தப்பட்டது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றியது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் மோதவிருக்கின்றன. பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கான விளம்பர வருவாயை வைத்துதான் ஐசிசி தொடர்கள் திட்டமிடப்படுகின்றன. அதை வைத்துதான் ஒளிபரப்பு உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படுவது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.