சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Published On :2 பிப்ரவரி 2025, 6:51 pm IST

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணே மைதானத்தில் நேற்று முன் தினம் (ஜனவரி 31) நடைபெற்றது. அந்தப் போட்டி இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் கேப்டனாக வழிநடத்திய 50-வது போட்டியாகும்.

இங்கிலாந்து அணியை 50 டி20 போட்டிகளில் வழிநடத்தியுள்ள இரண்டாவது கேப்டன் என்ற சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார். அவருக்கு முன்பாக இயான் மோர்கன் இங்கிலாந்து அணியை 50-க்கும் அதிகமான டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.

இதுவரை இங்கிலாந்து அணிக்காக 133 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோஸ் பட்லர் 3,528 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 26 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 101 ஆகும்.

இந்தியாவுக்கு எதிராக புணேவில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.