கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

அறிமுகமான திடலிலே புதிய மைல்கல்லை எட்டிய நாதன் லயன்..!

ஆஸி. சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.

நாதன் லயன் - படம்: ஏபி

Published On :8 பிப்ரவரி 2025, 2:56 pm IST

ஆஸி. சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.

37 வயதாகும் நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆக.31ஆம் நாளில் காலே திடலில் அறிமுகமானார்.

தற்போது, அதே காலே திடலில் 550 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை தாண்டியுள்ளார். தினேஷ் சண்டிமால் விக்கெட்டை எடுத்தபோது இந்த சாதனையை நிகழ்த்தினார்.

தற்போது, மொத்தமாக 551 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் விளையாடி வருகிறார்.

2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 257க்கு ஆல் அவுட்டானது இலங்கை. ஆஸி. 414 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.

2ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி 33 ஓவர்கள் முடிவில் 98/4 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் லயன், குன்னஹ்மேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.

டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள்

1. முத்தைய முரளிதரன் - 800

2. ஷேன் வார்னே - 708

3. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 704

4. அனில் கும்ப்ளே - 619

5. ஸ்டூவர்ட் பிராட் - 604

6. க்ளென் மெக்ராத் - 563

7. நாதன் லயன் - 551

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.